5 மாநிலங்களில் போட்டியிட போகும் விடுதலை சிறுத்தைகள் கட்சி !

5 மாநிலங்களில் போட்டியிட போகும் விடுதலை சிறுத்தைகள் கட்சி !

Share it if you like it

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதால், பொதுச்சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கா அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பானை சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். அதன் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறது. எனவே, எங்களுக்கு பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it