சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர் முகம்மது இம்தியாஸ்  !

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர் முகம்மது இம்தியாஸ் !

Share it if you like it

அக்டோபர் 8 ஆம் தேதி, பீகார் மாநிலம் சஹர்சாவில் உள்ள சதர் தானா காவல்துறையில் 13 வயது சிறுமியின் தாய், மதர்சா ஆசிரியரான முகமது இம்தியாஸ் மீது புகார் அளித்துள்ளார். தனது புகாரில், முகமது இம்தியாஸ் தனது மகளை மூன்று மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து , முகமது இம்தியாஸ் அந்த சிறுமியிடம் யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் மிரட்டியுள்ளார். அதனால் அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதிக காய்ச்சல் வந்ததால் அச்சிறுமியின் பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கருக்கலைப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது இம்தியாஸ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், தானும் தனது கணவரும் டெல்லியில் வசிப்பதாக விளக்கினார். அவர்கள் சிறுமியை மதர்சாவில் சேர்ந்து படிப்பதற்காக பாட்டி வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், இம்தியாஸ் அவளை பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.

இது குறித்து சதர் தானா இன்ஸ்பெக்டர் சுதாகர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகாரை பெற்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மதர்சா ஆசிரியரைக் கைது செய்தனர். குறித்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it