ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான கூறப்படும் ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தின் மூலம் நிறைய முதலீடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளராக தான் இயக்கிய “மங்கை” படத்திற்கும் செலவு செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கிய பணமும் இதே போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணம் என்று கூறப்படுகிறது.