உண்டியல் இருக்குல்ல: எதுக்கு தி.மு.க.விடம் பிச்சையெடுத்த – மணி ஆவேசம்!

உண்டியல் இருக்குல்ல: எதுக்கு தி.மு.க.விடம் பிச்சையெடுத்த – மணி ஆவேசம்!

Share it if you like it

மூத்த பத்தரிகையாளர் மணி கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், யூ டியூப் இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;

கம்யூனிஸ்ட் கட்சியை தி.மு.க.வில் இணைத்து விடுங்கள். ஆனால், அவன் உங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டான். வெளிப்படையாக, வங்கி கணக்கில் சிபிஐக்கு ரூ.15 கோடி மற்றும் சிபி(ஜ)எம்-க்கு ரூ. 10 கோடி எதனை வைத்து நியாயப்படுத்த முடியும்.

இன்றைக்கு என்ன நிலைமை, ஸ்டாலின் அரசு வந்த பின்பு, எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தீர்கள். கலைஞர், ஜெயலலிதா உடன் கூட்டு சேர்ந்து, வெற்றி பெற்ற பின்பு அரசுக்கு எதிராக இரண்டே மாதங்களில் தெருவில் நிற்பீர்கள். இன்றைக்கு, அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வயிறு எரிந்து கிடக்கிறார்கள். செவிலியர்கள் அடிவயிறு கலங்கி நிற்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றவில்லை என காட்டமான முறையில் பேசியிருக்கிறார்.


Share it if you like it