மணிப்பூரில் என்ன நடக்கிறது… உண்மையை உணர்த்தும் வீடியோ!

மணிப்பூரில் என்ன நடக்கிறது… உண்மையை உணர்த்தும் வீடியோ!

Share it if you like it

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரான குக்கி இனத்தவருக்கும், பழங்குயினர் அல்லாத மெயிட்டி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்திருக்கிறது. இட ஒதுக்கீடுக்காக இப்பிரச்னை நடப்பதாக ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், போதைப் பொருளுக்காக நடக்கும் மோதல் என்று இன்னொரு தரப்பினர் கூறிவருகின்றனர். குறிப்பாக, மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருவதால், போதை பொருளால் ஆதாயம் அடைந்து வரும் பழங்குடியின குக்கி கிறிஸ்தவர்கள், கலவரத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறு.

இந்த சூழலில், குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்களை மெயிட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணமாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம், குக்கி இனத்தினர் மெயிட்டி இனத்தினரின் வீடுகளை தீவைத்து கொளுத்தி, பலரையும் கொன்று குவித்த வீடியோவும் வெளியாகி பேரத்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், உண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆளாளுக்கு தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி, மக்கள் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், மணிப்பூரில் உண்மையில் நடப்பது என்ன என்பது குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், குக்கி இன கிறிஸ்தவர்கள் மெயிட்டி இனத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வீடுகளை எரித்து, ஊரை விட்டே விரட்டி அடிப்பதாகவும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருதாகவும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it