ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான், ஆதரவு தெரிவித்த சீமான் !

ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான், ஆதரவு தெரிவித்த சீமான் !

Share it if you like it

சமீபத்தில் நடிகர் விஜய், திரிஷா,மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் திரிஷாவை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. திரிஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று (நவ 21) செய்தியாளர்களிடம் சீமான் பேசியவதாவது: “அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் வேண்டுமென்று பேசியிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் பலபேரின் மனம் காயப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடலாம். என் கட்சியில் வேட்பாளராக நின்று போட்டியிட்டவர் அவர். இன உணர்வு மிக்க ஒரு தமிழன். அவரை எல்லாரும் சேர்ந்துகொண்டு இப்படி செய்யும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் என்னால் கருத்து சொல்ல இயலாது. அவர் என்ன பேசினார் என்றே நான் கேட்கவில்லை.

எனக்கு தெரிந்து அவர் யார் மனதையும் காயப்படுத்தும்படி பேசமாட்டார். இயற்கையிலேயே வேடிக்கையாக பேசும் மனிதர் அவர். அதனால் அந்த மாதிரி பேசியிருப்பார். இதனை இவ்வளவு பெரியதாக எடுத்துப் பேச வேண்டுமா என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. விஜய்க்கு ஒரு பிரச்சினை வரும்போது நடிகர் சங்கம் ஏதாவது பேசியிருக்கிறதா? நடிகர் சங்கம் இவ்வளவு நாள் இயங்கியதா என்றே தெரியவில்லை. மகளிர் ஆணையம் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டபோது தலையிட்டதா? மகளிர் ஆணையம் என்ற ஒன்று உயிர்ப்புடன் இருக்கிறதா?” இவ்வாறு சீமான் பேசினார்.


Share it if you like it