களம் இறங்கிய சபரீசன் அதிர்ச்சியில் மாறன் சன்ஸ்..!

களம் இறங்கிய சபரீசன் அதிர்ச்சியில் மாறன் சன்ஸ்..!

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் தற்பொழுது உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை….

  • எந்த பக்கம் பம்பரம் சுழலும் என்பது இன்று வரை மர்மமாக இருப்பது.
  • அதிக சீட்டு கிடைக்கும் இடத்தில் பாய சிறுத்தை தயாராக இருப்பது..
  • தி.மு.க-வை ’கை’ கழுவ ’கை சின்னம்’ கவனம் செலுத்தி கொண்டு இருப்பது..
  • எங்கே குலுக்கினால் அதிக சீட்டு  கிடைக்கும் என்று ஒரு கட்சி தீவிர முயற்சி செய்து கொண்டே இருப்பது..
  • ஸ்டாலினுக்கு எதிராக கே.டி பிரதர்ஸ் படு பிஸியாக இருப்பது…

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூத்தும்.. ரத்த உறவுகளின் சூழ்ச்சியும்  ஸ்டாலினுக்கு எதிராக இன்று வரை செயல்பட்டு கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே..

தி.மு.க-வில் கே.டி. பிரதர்ஸின் ஆதிக்கத்தை முற்றிலும் அழித்து.. தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக  ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள்.. சன் குழுமத்திற்கு எதிராக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலை களத்தில் இறக்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்…


Share it if you like it