தாம் கைது செய்யப்படலாம்: பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் வெளியிட்ட ஆதாரம்!

தாம் கைது செய்யப்படலாம்: பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் வெளியிட்ட ஆதாரம்!

Share it if you like it

தி.மு.க. அரசால் தாம் கைது செய்யப்படலாம் என பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், சபரீசன் தொடங்கிய நிறுவனம் குறித்து சில முக்கிய ஆதாரத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாரிதாஸ் ட்விட்டர் பதிவு…

தி.மு.க. அரசு மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால் அதற்கு காரணமான இந்த ஆதாரங்களை மக்கள் முன் வைக்கிறேன். ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் UK – வில் முதலீடு செய்துள்ள இரு நிறுவனங்கள் விவரம், அதை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கான விவரங்கள்

இரண்டு நிறுவனங்களுமே telecommunication activities மற்றும் financial intermediation சேவை வழங்குபவை. பொதுவாக இணையச் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி நிர்வாகம் சார்ந்து இடைத்தரகர்களாக வேலை செய்கின்றன. அதற்கான ஆதாரம்.

இந்த நிறுவனங்களில் சபரீசன் நிர்வாகக் குழுவில் இணைந்த appointed தேதி 18-10-2022 எனத் தெரிவிக்கின்றன. UK அரசு ஆவணம் 25 ஆம் தேதி என்று அதனை உறுதிப்படுத்திய ஆவணம். குறிப்பிட்ட இரண்டு நிறுவனமும் பெரிய கட்டமைப்பு கொண்டவை அல்ல. உற்பத்தி நிறுவனங்களும் அல்ல. ஒரு இடைத்தரகர்களாகச் செயல்படும் அளவிற்கே பின்புலம் உள்ளவை.

5 கோடி கூட வருமானம் ஈட்டாத இந்த நிறுவனங்களில் அவசரமாக சபரீசன் முதலீடு செய்யக் காரணம்? அடுத்து இரண்டு நிறுவனத்தின் significant control வைத்திருப்பவர் ஒரு நபரே அவர் ஶ்ரீனிவாச வெங்கடேஷ். இவர் ஒரு chartered accountant. இவர் இந்த இரண்டு நிறுவனம் தவிர St Georges Bank என்ற முதலீட்டு ஆலோசனை கொடுக்கும் நிறுவனத்தில் Consultant and Director இருக்கிறார் என்பது முக்கிய விசயம். இந்த St Georges Bank நிறுவனத்தில் Parent நிறுவனம் Westpac Banking என்ற முக்கிய வங்கி.

இந்த Westpac Bank மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டுச் சர்வதேச அளவில் money laundering வேலையைச் செய்தது. கணக்கில் காட்ட முடியாத பணத்தை முதலீடுகளாக தன் துணை நிறுவனங்கள் மூலம் மாற்றியது. இதை அப்படியே வைத்து விட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் வேலையைப் பார்த்தோம் என்றால் தொடர்புப்படுத்தி நடப்பது என்ன என்பதை யூகிக்க இயலும்.

சென்னையில் சபரீசன் சார்ந்தோர் நிறுவனமாக அறியப்படும் wired entertainment என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நிறுவனத்தின் Website இந்த நிறுவனம் Fibernet மூலம் கேபிள் டீவி, Internet என சேவையை வழங்கத் தயார் ஆகி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் கேபிள் ஆப்ரேட்டர்கள் அழைத்துப் பேசி முடித்துள்ளது தி.மு.க. தலைமை குடும்பம். இது கருணாநிதி குடும்பத்திலிருந்து வந்துள்ள இன்னொரு SCV எனப் பேசப்படுகிறது.

கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 8 மாதங்கள் மேல் தாமதமான நிலையில் தான் சபரீசன் UKவில் இருக்கும் நிறுவனங்களோடு கைகோர்க்கிறார். ஒன்று Fibernet தொழில் தொடங்க தேவையான சாதனங்கள், இரண்டு money laundering இரண்டும் இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும். இதை நாங்கள் வெளியிட்டது தேதி 29.11.22. அதில் சபரீசன் சார்ந்தோர் நிறுவனமாகக் கருதப்படும் wired entertainment சிங்கப்பூர் முகவரியும் வெளியிட்டு இருந்தோம்.

அடுத்த நாளே அந்த முகவரியை நீக்கி update செய்துள்ளது அந்த தரப்பு. அதற்கான ஆதாரம் (web archive மூலம் பழைய பக்கம் காணவும்) வீடியோ வெளியிட்ட அடுத்த நாள் 30.11.2022 காலை 08.48am அளவில் இந்த முகவரி நீக்கும் வேலையைச் செய்துள்ளனர். அதற்கான XML sitemap ஆதாரம்..

கேபிள் ஆப்ரேடர்களுக்கு 2 முதல் 5 லட்சம் வரை வைப்பு நிதி கொடுக்க கூறியுள்ளது சபரீசன் தொடர்புடைய நிறுவனம். ஆனால் பணியைத் தொடங்காததற்கு காரணம் Intellectual Property India வில் இந்த நிறுவனத்தின் Brand Trade Mark பதிவு ஏற்கப்படவில்லை

முதலில் இந்த நிறுவனம் wired entertainment எனப் பதிவு செய்ய முயற்சி நடந்தது ஆனால் அது ஏற்கப்படாத நிலையில் அதனை We Connect என மாற்றிப் பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. ஆக இரண்டும் வேறு நிறுவனம் அல்ல. அதற்கான ஆதாரம் இந்த கடிதம்.

அந்த We Connect நிறுவன பதிவும் தற்போதைய நிலை Objected.. எனவே தான் தாமதமாகிறது ஆப்ரேட்டகளுடன் பணியைத் தொடங்க. ஆனால் பூர்வாங்க வேலைகளான Fibernet தேவையான wire இழுக்கும் பணியைச் சென்னை முழுவதும் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிலையில் எப்படி சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது wire கொண்டு செல்ல? கூட்டுக் கொள்ளையில் சென்னை மாநகராட்சியும் மேயரும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் விசாரணை வட்டத்தில் கொண்டுவருவது அவசியம்.

ஒரு குடும்பம் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை கொள்ளை அடித்து அந்த பணத்தை கொண்டு நிறுவனக்களை அழித்து SCV Suntv போல் மீண்டும் Fibernet துறையில் ஒரே பெரும் நிறுவனமாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் என்றால் இனியும் இந்த குடும்பத்தை அனுமதிக்க முடியாது

தி.மு.க. தலைமை குடும்பம் அதிகார வெறி கொண்டு அடக்குமுறைகளை ஆரம்பிக்கலாம் என்பதால் இதனை மொத்தமாக மக்கள் முன் வைக்கிறேன். இன்னும் சுமார் 30% டாக்குமெண்ட் வெளியிடப்படாமல் உள்ளது. விரைவில் அதுவும் வெளியிடப்படும். இது 1970கள் அல்ல 2022. தி.மு.க. அடக்குமுறைக்கு அஞ்சோம்.


Share it if you like it