மதத்தை தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன் – மயில்சாமி ஆவேசம்!

மதத்தை தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன் – மயில்சாமி ஆவேசம்!

Share it if you like it

மதங்கள் குறித்து தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நகைச்சுவை நடிகர் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் மூத்த தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். மேலும், தேசத்திற்கு எதிராகவும் பிரிவினையை தூண்டும் வகையிலும், இவரது கருத்துக்கள் இருக்கும். அதனை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. சார்பில் நாமக்கல் மாநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு அண்மையில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், கலந்து கொண்ட ஆ. ராசா ஹிந்துக்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். இவரின், கருத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பத்திரிகையாளர்களை சந்தித்த போது,

ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பிரித்து பேசுபவன் மனிதனே கிடையாது. மூன்று மதமும் சேர்ந்தது தான் தேசிய கொடி. உங்கள், ஓட்டிற்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டான், உங்களுக்கு தான் ரிவீட் அடிப்பான். மதத்தை, தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன் என ஆவேசத்துடன் பேசியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it