ம.தி.மு.க. இனி தேறாது துரைசாமி காட்டம்!

ம.தி.மு.க. இனி தேறாது துரைசாமி காட்டம்!

Share it if you like it

ம.தி.மு.க.வை வழிநடத்தும் திறமை, ஆற்றல் இனி வைகோவுக்கு இல்லை. அதாவது, அந்த கட்சி தேறாது என மதிமுக முன்னாள் அவைத் தலைவர் சு.துரைசாமி மிக கடுமயைகா விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் :

“நான் என்னுடைய நிலைப் பாட்டை தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தொழிற்சங்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சங்கம் எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்பது, அந்தந்த சங்கத்தின் முடிவே தவிர, சங்கத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

வேண்டுமென்றே ஏதோ பிரச்சினை இருப்பதுபோல தேவையின்றி குழப்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் எனக் கூறுகிறார். அப்போது எதற்கு தனிக் கட்சி, திமுக-வுடன் மதிமுக-வை இணைக்கலாமே. தற்போதைய நிலையில் வைகோவுக்கு இனி மதிமுகவை நடத்தும் திறமை, ஆற்றல் இல்லை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 6 சீட்டுகளை பெற்றது.

சாத்தூரில் துரைவைகோ நின்றால் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மல்லை சத்யா என்னிடம் தெரிவித்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். வாங்கிய 6 தொகுதிகளில் அவரது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் எதிர்ப்பேன் என்றேன். இதற்கு அஞ்சி தான் துரை வைகோவை நிறுத்தவில்லை என கூறினார்.


Share it if you like it