மனைவியை அரை நிர்வாணமாக்கி அராஜகம்… காப்பாற்றக்கோரி மண்டியிட்டு கதறும் ராணுவ வீரர்!

மனைவியை அரை நிர்வாணமாக்கி அராஜகம்… காப்பாற்றக்கோரி மண்டியிட்டு கதறும் ராணுவ வீரர்!

Share it if you like it

தனது மனைவியை ஊர் மக்கள் அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்துவதாகவும், அவரை காப்பாற்றக் கோரியும், காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் மண்டியிட்டு வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். ராணுவ வீரரான இவர், தற்போது காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி படவேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் இடத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த சூழலில், நேற்று சுமார் 120 பேர் இவரது மனைவியின் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, இவரது மனைவியையும் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயனுக்கு புகார் அனுப்பி இருக்கும் பிரபாகரன், தனது மனைவியைக் காப்பாற்றக் கோரி, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மேற்படி விவரங்களை குறிப்பிட்டிருக்கும் ராணுவ வீரர் பிரபாகரன், தனது மனைவியைக் காப்பாற்றக் கோரி, மண்டியிட்டு கதறுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it