தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் லைட் மீடியா என்று தமிழக ஊடகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
அதே போன்று தமிழக வேளாண் துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்த காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவரை திட்டிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்.
தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலர் மு.க பணியாளர்களை திட்டுவதும், அவமதிப்பதும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதும் என இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பொறுப்ப முறையில் பதில் அளித்த சம்பவத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் வழக்கம் போல தி.மு.க அமைச்சரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.