பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை: இதுதான்டா பா.ஜ.க.!

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை: இதுதான்டா பா.ஜ.க.!

Share it if you like it

மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் நான் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது, எல்லாம் தி.மு.க. அடிமைகளுக்கு எங்கு தெரிய போகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். இதையடுத்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு பெங்களூரு செல்ல நேற்றிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டரும் பூத்நிலை முகவருமான மணிகண்டனை சந்தித்து உரையாடினார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it