பாரதப் பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலிய பிரதமராக இருப்பவர் ஜியோர்ஜியா மெலோனி. இவர், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அந்த வகையில், அரசு சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் சந்தித்து கொண்டனர். அப்போது, இத்தாலி பிரதமர் பேசும் போது இவ்வாறு கூறினார் :
உலக தலைவர்கள் அதிகம் விரும்பும் தலைவராக இந்திய பிரதமர் மோடி இருக்கிறார். அவர், ஒரு முக்கிய தலைவர் என்பதை பல்வேறு தருணங்களில் நிரூபித்துள்ளார். அதற்காக, எனது வாழ்த்துகளை மோடிக்கு தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.