அண்ணாமலைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

அண்ணாமலைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

Share it if you like it

டெல்டா மாவட்டம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடுத்த கோரிக்கையை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏப் – 5 தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் திரு. சி.டி. ரவி அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு

பா.ஜ.க. சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நிலக்கரி எடுக்கும் டெண்டர் முறையை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it