தொடரும் சர்ச்சைகள்… திருந்தாத பொன்முடி… தூக்கம் தொலைக்கும் ஸ்டாலின்!

தொடரும் சர்ச்சைகள்… திருந்தாத பொன்முடி… தூக்கம் தொலைக்கும் ஸ்டாலின்!

Share it if you like it

அமைச்சர் பொன்முடியின் அராஜகம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை, நிர்வாகி ஒருவரின் முகத்தில் விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியில் சேரும் புதிய நபர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைமை கூறியிருப்பதாகத் தகவல். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை, அமைச்சர் பொன்முடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சில பகுதிகளின் நிர்வாகிகள் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கி இருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, அந்த படிவத்தை நிர்வாகியின் முகத்தில் விசிறியடித்து ஆவேசமாகத் திட்டனார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், அமைச்சர் பொன்முடி நீர் மோர் பந்தலை மட்டும் திறந்து வைத்து விட்டு சென்று விட்டார். இச்சம்பவம் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it