தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் பயப்படுகிறார் என தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேசியிருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
வல்லரசு நாடுகளே வியந்து பார்க்கும் உலக தலைவராக இருப்பவர் பாரதப் பிரமதர் மோடி. ஐ.நா.வில் தொடங்கி சைனா மக்கள் வரை பிரதமரின் பெருமைகள் குறித்து இன்று வரை பேசி வருகின்றனர். பிரதமரின் அதிரடி அரசியலை கண்டு காங்கிரஸ் கட்சியே ஆட்டம் கண்டுள்ளது.
இப்படிப்பட்ட உலக தலைவர் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக இன்று சென்னைக்கு வருகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வரை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் பேசியுள்ளார். இந்த காணொளியை பார்த்துவிட்டு தங்கள் மனம் போன போக்கில் மெல்டிங் சரவணனை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.