மோடியின் தைரியம் தனக்கு பிடித்து இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வது போல் பாகிஸ்தானும் செய்ய வேண்டும். வல்லரசு நாடுகளின் அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மோடியின் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, கடந்த 2022 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப்பை போல் வெளிநாடுகளில் பிரதமர் மோடி சொத்து குவிக்கவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான், அவர் மீண்டும் பாரதப் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.