ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி; இதன் மறுவடிவம் காங்கிரஸ் – பிரதமர் கடும் தாக்கு!

ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி; இதன் மறுவடிவம் காங்கிரஸ் – பிரதமர் கடும் தாக்கு!

Share it if you like it

கர்நாடக மாநில பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை அவர் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது : “கர்நாடக மக்கள் பா.ஜ.க. மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பா.ஜ.க. தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அடங்கிய சிறு குழுக்களை உருவாக்குங்கள். அவர்கள் கர்நாடகாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இரட்டை எந்திர ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். அனைத்து செய்திகளையும் நீங்கள் டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மணிநேரம் செலவழியுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி வாங்குங்கள்” என்று வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து, பூத் கமிட்டி நிர்வாகிகள் பிரதமரிடம் கேள்விகளை எழுப்பினர். இதற்கு, அவர் அளித்த பதில் இதோ, “ஒரு ட்ராக்டரில் மாருதி காரின் சக்கரத்தை மாட்டினால் அது வேலை செய்யுமா? ஒரு போதும் வேலை செய்யாது. இரட்டை எந்திர ஆட்சி போன்ற ஒரே சீரான அமைப்பினால் தான் வளர்ச்சியை உருவாக்க முடியும். இதனை மக்களிடம் கூறுங்கள். மக்களிடம் நீங்கள் நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அது மற்றவர்களின் வேலை. நான் இந்த சின்னச் சின்ன விஷயங்களை தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். நீங்கள் இதை வாக்காளர்களிடம் சொல்லுங்கள்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத சில அரசியல் கட்சிகள் இந்த கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளன. இதனால் எல்லாம் எப்படி ஒரு அரசு இயங்க முடியும். இன்று, நாளை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு ஒரு அரசாங்கம் செயல்பட முடியாது. அது வருங்கால சந்ததிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இமாச்சலப்பிரதேசத்தில் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட காத்திருக்கிறார்கள். ராஜஸ்தான் மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் போராட்டம் நடத்த தொங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி என்று அர்த்தம். இனி காங்கிரஸ் கட்சி என்ன வாக்குறுதிகளை வழங்கும். அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன.

இப்போது மற்ற கட்சியினரும் இதே விஷயங்களை பின்பற்றுவார்கள் என மக்கள் சொல்லலாம். ஆனால் அவர்களால் இதனைச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். இது ஒரு தவம். பா.ஜ.க.வால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அதனால் ரகசியங்கள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டதில்லை. நான் இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். முதல் அணியாக நாம் மக்களுக்கு வேலை செய்வோம். நமக்கு மக்களின் ஆசீர்வாதம் இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்கள் அனைத்து பூத்களுக்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்யவேண்டும்” என தெரிவித்தார்.


Share it if you like it