பாரதப் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை இன்று நாட்டிற்கு அர்பணித்தார். அந்த வகையில், முதற்கட்டமாக புனித செங்கோலை சபாநாயகர் இருக்கையின் வலதுப்புறமாக நிறுவினர். இதையடுத்து, 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அந்த வகையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.