நீங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இயக்குனர் பேரரசு சவுக்கடி கேள்வி!

நீங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இயக்குனர் பேரரசு சவுக்கடி கேள்வி!

Share it if you like it

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட செங்கோலை தமிழர்களே எதிர்த்தால், நீங்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லையா என்று திரைப்பட இயக்குனர் பேரரசு சவுக்கடியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பார்லிமென்ட் கட்டடத்தை பாரத பிரதமர் மோடி இன்று திறந்து வைத்திருக்கிறார். உலகிலுள்ள மிகப்பெரிய பார்லிமென்ட்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு, நேரு பிரதமராக பதவியேற்றபோது, தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 1947-ம் வழங்கிய வழங்கிய செங்கோலை, புதிதாக கட்டப்பட்டிருக்கும் பார்லிமென்டில் நிறுவி இருக்கிறார் பிரதமர் மோடி. இது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் இருக்கும் சில தேச விரோத சக்திகளும், திராவிட கும்பல்களும் செங்கோல் நிறுவியதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில்தான், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நீங்கள் தமிழர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் திரைப்பட முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பேரரசு. இதுகுறித்து பேரரசு வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதவில், “தமிழ் எழுத்துக்கள் பொறித்த செங்கோலை பிற மொழிக்காரர்கள் எதிர்த்தால் அதில் அர்த்தமுண்டு! தமிழர்களே எதிர்த்தால்??? எதிர்ப்பவர்கள் தமிழர்களே இல்லை என்பதுதான் உண்மையாகிறது!” என்று காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it