இந்தியாவின் சார்பில் இலங்கை வாழ் மலையக தமிழர்களுக்கு கட்டி கொடுத்த வீடுகளை அந்நாட்டு யூ டியூப்பர் சந்துரு நம் கண் முன்னே படம் பிடித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இலங்கை வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், மலையக தமிழர்களுக்கு 161 வீடுகளை பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கட்டி கொடுத்துள்ளது. மலையக தமிழர்களின் வீடுகள் எப்படி உள்ளது என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஆர்.ஜே சந்துரு. இவர், இலங்கையின் மிக பிரபலமான யூ டியூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களுக்கு மோடி என்ன செய்தார் என கேள்வி கேட்டும் தமிழக சில்லறை போராளிகளுக்கு சந்துரு தக்க பதிலடியை இதன் மூலம் கொடுத்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.