பாரதப் பிரதமர் மோடி மனதின் மான்கி பாத் உரையில் தூத்துக்குடி மக்களின் சேவைக்கு பாராட்டு.
மாதம் தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் தனது எண்ணத்தையும், தேசத்திற்கு பெரும் சேவை செய்து வரும் மக்கள் குறித்து பாரதப் பிரதமர் மோடி பேசி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. இச்சூழ்நிலையில் இன்று மான்கி பாத்தில் உரையாற்றும் பொழுது தூத்துக்குடி மக்களின் சேவையை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார் அவர் கூறியதாவது.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவிவுகள், திட்டுகள், கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகின்றனர். நாம் இயற்கையை பாதுகாக்கும் போது அதற்கு பதிலாக இயற்கையும் நம்மை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.