பிரதமரின் அசுர வளர்ச்சி: கதறிய மூத்த பத்திரிக்கையாளர்!

பிரதமரின் அசுர வளர்ச்சி: கதறிய மூத்த பத்திரிக்கையாளர்!

Share it if you like it

பாரதப் பிரதமரின் வளர்ச்சியை கண்டு மூத்த பத்திரிக்கையாளர் மணி வழக்கம் போல கதறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில், இந்தியர்களை மற்ற நாடுகள் பார்த்த விதம் ஒன்று, பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு, பார்க்கும் விதம் வேறு என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஏன்னெனில், 2 ஜி ஊழல் அந்த அளவிற்கு, இந்தியாவின் நற்பெயரை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு இந்தியாவின் செல்வாக்கு படி படியாக உயர துவங்கியது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்தியாவின் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் அரும்பாடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று உலக நாடுகளையே புரட்டி போட்ட சமயத்தில், இந்திய மக்களையும் காப்பாற்றி தனது அண்டை நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்தவர் பாரதப் பிரதமர். மேலும், கொரோனா தொற்று பிரேசில் நாட்டில், அதிகமாக பரவி வந்த சமயத்தில், அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, “பகவான் ராமரின் சகோதரரான லக்‌ஷ்மணனைக் காப்பாற்ற, புனித மருந்தை இமாலயத்திலிருந்து பகவான் அனுமான் எடுத்து வந்தார். அதேபோல, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை, தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு, பாரதப் பிரதமரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதன் மூலம், பாரத பிரதமரின் செல்வாக்கை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில், அமெரிக்காவை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற பொலிட்டிக்கல் இன்டலிஜென்ஸ் அமைப்பு உலகளாவிய தலைவர்களில் பிரபலமானவர் யார் என்பது குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதற்காக, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 13 நாடுகளின் தலைவர்களை தேர்ந்தெடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டது. ஒவ்வொரு நாட்டிலும் வயது, பாலினம், பிராந்தியம் மற்றும் கல்வி முறிவுகள், சில நாடுகளில் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புகள் எடைபோடப்பட்டன. இந்த ஆய்வு முடிவை அந்நிறுவனம் கடந்த (மார்ச் 18) வெளியிட்டது. இதில்தான், பாரத பிரதமர் நரேந்திர மோடி 77% ஒப்புதல் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார்.

அதன்படி, நாளுக்கு நாள் பாரதப் பிரதமர் மோடியின், புகழ் இந்தியாவையும் கடந்து உலக நாடுகள், மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படுபவர் பத்திரிக்கையாளர் மணி. இவர் தான், வழக்கம் போல மோடியின் புகழை கண்டும், வளர்ச்சியையும் கண்டும் கதறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it