பிரக்ஞானந்தா குறித்து பாரதப் பிரதமர் மோடி ட்விட்!

பிரக்ஞானந்தா குறித்து பாரதப் பிரதமர் மோடி ட்விட்!

Share it if you like it

உலக சதுரங்க சாம்பியன் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்ததற்கு பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தையும், பாராட்டையும், தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா (16 ) தனது அற்புதமான ஆட்ட திறன் மூலம் தோல்வியுற செய்து சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடி செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் ட்விட்டர் பதிவு இதோ.

இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றதற்காக பெருமைபடுகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். என பிரதமர் இவ்வாறு தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.


Share it if you like it