அம்மா.. உதவி ? என்று கேட்ட நபர் ….. உடனே உதவிய நிர்மலா சீதாராமன் !

அம்மா.. உதவி ? என்று கேட்ட நபர் ….. உடனே உதவிய நிர்மலா சீதாராமன் !

Share it if you like it

கோபால கிருஷ்ணன் என்பவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் உதவி வேண்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் உடனடியாக அவருக்கு உதவியுள்ள நிகழ்வானது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோபால கிருஷ்ணன் அந்த பதிவில், “அம்மா புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெரபரடைட் ஊசி வேண்டும்.. மக்கள் மருந்தகத்தில் கிடைக்கவில்லை… எங்களுக்கு உதவ முடியுமா? என்று உதவி வேண்டி நிர்மலா சீதாராமனிடம் முறையிட்டார்.

அதற்கு நிர்மலா சீதாராமன் “நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்பானது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கிறேன். தயவுசெய்து உங்கள் தொடர்பு விவரங்களை DM வழியாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.

இதனை அடுத்து கோபால கிருஷ்ணன் தனது அலைபேசி எண்ணை அவருக்கு அனுப்பியுள்ளார். சிறிது நேரத்திற்குள் அவருக்கு தேவையான மருந்துகள் கிடைத்துவிட்டது….நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மிக்க நன்றி என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *