காலில் கட்டு, தலையில் பேண்டேஜ்… இணையத்தில் வெளியான காங்கிரஸ் தலைவர் அழகிரி போட்டோ..!

காலில் கட்டு, தலையில் பேண்டேஜ்… இணையத்தில் வெளியான காங்கிரஸ் தலைவர் அழகிரி போட்டோ..!

Share it if you like it

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காலில் கட்டு மற்றும் தலையில் பேண்டேஜ் போட்டிருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி பரபரப்பாகி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி. இவர்தான், காலில் கட்டு மற்றும் தலையில் பேண்டேஜ் போட்டிருப்பது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, அழகிரிக்கு என்னாச்சு என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், நடைப்பயிற்சியின் போது தவறி விழுந்து காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கீரப்பாளையத்தில் உள்ள வீட்டில் நடைப்பயிற்சி செய்போது கே.எஸ்.அழகிரி தவறி விழுந்து விட்டார். இதில், அவரது நெற்றி மற்றும் கால் முட்டி ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பி விட்டார். தற்போது அழகிரி ஓய்வெடுத்து வருவதால், தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it