காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் தான் இடித்தார் – மௌலானா ஷம்சுதீன் காசிமி ”ஓபன் டாக்”…!

காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் தான் இடித்தார் – மௌலானா ஷம்சுதீன் காசிமி ”ஓபன் டாக்”…!

Share it if you like it

காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் தான் இடித்தார் இஸ்லாமிய மதகுரு கருத்து.

ஹிந்துக்களின் புனித வழிபாட்டு தலமான வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை சமீபத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது.

ஔரங்கசீப்பின் அராஜகங்களை வரலாறு கண்டது, மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது, ஒரு ஔரங்கசீப் இருந்தால், ஒரு சிவாஜியும் இருப்பார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இஸ்லாமிய மதகுரு ஷம்சுதீன் காசிமி அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் தான் இடித்தார் என்று அவர் வெளிப்படையாக ஒப்பு கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது.

எந்த நேரமும் பிரதமராக மோடி இருக்க மாட்டார், அவர் ஒரு நாள் இயமலைக்கு செல்வார், யோகி தனது மடத்திற்கு திரும்புவார். மோடி, யோகிக்கு, பிறகு யார்? உங்களை காப்பாற்றுவார்கள் எங்களுக்கும் நேரம் வரும். எதையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் சமீபத்தில் ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசாவுதீன் ஓவைசி அவர்கள் சமீபத்தில் பேசிய சம்பவம் அடங்குவதற்குள் ஷம்சுதீன் காசிமி அவர்களின் இந்த பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஔரங்கசீப் தனது ஆட்சியில் அரங்கேற்றிய கொடூரங்கள்.

  • இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு அதிக வரி
  • ஹிந்து ஆலயங்கள் அதிக அளவில் இடிப்பு.
  • ஹிந்துக்கள் புதிதாக கோவில் கட்ட அனுமதி மறுப்பு.
  • சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு.
  • இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பும் மக்களுக்கு ஏராளமான சலுகை.
  • தண்டனை கைதிகள் இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்புவதாக கூறினால் சலுகை.
  • ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை தங்களது பணியில் அமர்த்த தடை.
  • இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற தீவிர முயற்சி இன்னும் பல கொடுமைக.ள்

ஆதாரம்; வந்தார்கள் வென்றார்கள் புத்தகம்.


Share it if you like it