ஹிந்துக்கள் மீது வீண் பழியை சுமத்திய சிறுவன்!

ஹிந்துக்கள் மீது வீண் பழியை சுமத்திய சிறுவன்!

Share it if you like it

இரு மதங்களிடையே வன்முறையை தூண்ட முயன்ற சிறுவன்.

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த சிறுவன் ஷயான். இச்சிறுவன், 8- ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறார். கடந்த ஜூன் 27 – ஆம் தேதி சக்கரவர்த்தி மைதானத்தில் இருந்து தாம் வந்து கொண்டு இருந்த பொழுது அடையாளம் தெரியாத இருவர் தம்மை தாக்கி தனது சட்டையை கிழித்து விட்டதாக கூறியிருந்தான். மேலும், தம்மை தாக்கியவர்களின் நெற்றியில் திலகமும் கையில் காவி கயிறு கட்டி இருந்ததாக குறிப்பிட்டு இருந்தான். இதையடுத்து, அச்சம்பவம் காட்டு தீ போல அப்பகுதியில் பரவி இருக்கிறது.

இதனை தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது, தன்னை தானே தாக்கி கொண்டும் தனது சட்டையை தானே சிறுவன் கிழித்து கொண்ட காட்சிகள் அனைத்தும் அதில் பதிவு இருக்கிறது. இதையடுத்து, சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது சிறுவன் கூறியது அனைத்தும் பொய் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்தான செய்தியினை பிரபல அரசியல் விமர்சகர் அன்சூல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it