கோவில் வாசலில் மட்டன் பிரியாணி – திமுகவினர் அராஜகம்

கோவில் வாசலில் மட்டன் பிரியாணி – திமுகவினர் அராஜகம்

Share it if you like it

கொரோனா பரவலை தடுக்க சாமான்யர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை பணயம் வைத்து ஊரடங்கை மதித்து நடந்துகொள்ளும் நிலையில். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் வாசலில் திமுகவினர், கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை கொடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ எழிலனின் ஹிந்து விரோத பேச்சுகள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில். அவரது தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் என்றும் பாராமல் அந்த கோவிலின் வாசலை அடைத்து அடாவடி தனம் செய்ததோடு அசைவ உணவு வேறு கொடுத்தது ஹிந்துதுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it