சாராயத்துல சேன தண்ணி… சீமானின் அளவில்லா காமெடி!

சாராயத்துல சேன தண்ணி… சீமானின் அளவில்லா காமெடி!

Share it if you like it

சாராயத்துல சேன தண்ணி வச்சாங்க எனக்கு என்று சீமான் கூறியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

பொதுவாக குழந்தைகள் பிறந்ததும், உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் குழந்தைக்கு நாக்கில் தேன் அல்லது சீனி தண்ணி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், நாம் தமிழர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னடா சீமான் ரொம்ப ஓவரா பேசுறானேன்னு எல்லோரும் நினைக்கிறாங்க. அதுக்கு காரணம் இருக்கிறது. கிராமத்துல இருக்கிறவங்களுக்கு தெரியும். குழந்தை பிறந்த சில நாட்களில் அக்குழந்தைக்கு சேன தண்ணி தொட்டு வைப்பார்கள்.

சொந்தக்காரங்களும், அக்கம்பக்கத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்குழந்தை சீனி தண்ணியை தொட்டு நாக்கில் வைப்பார்கள். ஆனால், எனக்கு என்ன தண்ணி வச்சாங்க தெரியுமா? சாராயத்தை தொட்டு சேன தண்ணி வச்சாங்க” என்று கூறியிருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், வரவர சீமானின் காமெடிக்கு அளவில்லாமல் போய் விட்டது. இவர் குழந்தையாக இருக்கும்போது இவருக்கு என்ன சேன தண்ணி வச்சாங்க என்று இவருக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்புவதோடு, கேலி, கிண்டலும் செய்து வருகின்றனர்.


Share it if you like it