கே.எஸ். அழகிரியை தொடர்ந்து நாராயணாசாமி தி.மு.க.விற்கு எச்சரிக்கை!

கே.எஸ். அழகிரியை தொடர்ந்து நாராயணாசாமி தி.மு.க.விற்கு எச்சரிக்கை!

Share it if you like it

புதுச்சேரியில் நடக்கும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை ஏற்கும், இல்லாவிட்டால், நாங்கள் தனித்தே போராட்டத்தை நடத்துவோம் என நாராயணசாமி எச்சரிக்கை விடுத்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ’தி டிபேட்’ யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் ;

தி.மு.க. இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறதே இதுகுறித்து, உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் கேட்கிறார். இதற்கு, கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க. வெற்றி பெற முடியுமா? கூட்டணி இல்லாமல் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்து இருந்தார். கே.எஸ். அழகிரியின் இந்த திடீர் சவால் அதன் கூட்டணி கட்சிகளின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், புதுவை யூனியன் பிரதேச முன்னாள் முதல்வருமான நாராயணசாமி தெரிவித்து இருக்கும் கருத்து தி.மு.க. வட்டாரத்தில் பெரும் புயலை வீசியுள்ளது. அவர் கூறியதாவது ;

சமீப காலமாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் புதுச்சேரியில் நடக்கும் போராட்டங்கள், தி.மு.க. தலைமையில் நடைபெறுவதாகத்தான் செய்திகள் வெளியாகின்றன. போராட்டத்துக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. கூட்டணிக் கட்சி ஒத்துழைக்காவிட்டால் காங்கிரஸ் சார்பில் தனித்து போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it