மாஸ் காட்டிய தேசிய கொடியின் ஊர்வலம்!

மாஸ் காட்டிய தேசிய கொடியின் ஊர்வலம்!

Share it if you like it

தேசிய கொடியின் ஊர்வலத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் சவுக்கார்பேட்டை வாசிகள் ஈர்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடே தற்போது விழாகோலம் பூண்டு இருக்கிறது. அந்த வகையில், சென்னை சவுக்கார்பேட்டை சேர்ந்த பகுதிமக்கள் தேசிய கொடியின் ஊர்வலத்தை நடத்தி இருக்கின்றனர். இந்த ஊர்வலம், இன்று காலை 9;30 மணிக்கு மகா சக்தி ஓட்டல் முன்பு துவங்கியது. அந்த வகையில், முத்தையா தெரு வழியாக கோவிந்த நாயக்கப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் ரோடு மற்றும் நைனியப்பன் நாயக்கர் தெரு, ராஜாப்பா தெருவை சென்று அடைந்தது. அதன்பிறகு, மிண்ட் வழியாக மீண்டும் மகா சக்தி ஓட்டல் முன்பு இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it