காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளிதழின் வெளியீட்டாளரான ஏஜேஎல்-க்கு சொந்தமாக டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளையும், யங் இந்தியா நிறுவனம் ஏஜேஎல் நிறுவனத்தில் வைத்துள்ள ரூ.90.21 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.