நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய அமைச்சர் உதயநிதி, ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் ஏதாவது தொகுதியில் தேர்தல் போட்டியிடட்டும் என பேசி இருந்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளித்துள்ளார். ஆளுநரை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப்-4 தேர்வு எழுத முடியுமா? என அவர் கேட்டுள்ளார். திமுகவில் உள்ள சீனியர்கள் உதயநிதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை சொல்லித் தர வேண்டும் என்றும் உதயநிதிக்கு எப்படி பேச வேண்டும் என கற்றுத் தர வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.