ஜாகிர் நாயக் ஞானியாம்… வேற யாரு… விஜயதரணிதான்!

ஜாகிர் நாயக் ஞானியாம்… வேற யாரு… விஜயதரணிதான்!

Share it if you like it

இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக் ஞானி என்றும், அப்படிப்பட்டவரை வேண்டாம் என்று சொல்லும் இந்த அரசு வேண்டாம் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய மத பிரசாரகராக அறியப்படுபவர் ஜாகிர் நாயக். இவர், ஹிந்து, கிறிஸ்தவ மதங்களை ஒப்பிட்டு இஸ்லாம் மதம்தான் உயர்ந்தது என்று பேசக்கூடியவர். இவரது பேச்சில் நஞ்சு கலந்திருக்கும். ஆனால், தேன் தடவி நல்லதைப் போல பேசுவார். இவரது பேச்சைக்கேட்டு ஒருவன் பயங்கரவாதியாக மாறி பங்களாதேஷில் பயங்கரவாத செயலை அரங்கேற்றியது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து, இஸ்லாமிய நாடான பங்களாதேஷில் ஜாகீர் நாயக், அவரது பிரசங்கள், அவரது தொலைக்காட்சி சேனல் என அனைத்துக்கும் அந்நாடு தடை விதித்திருக்கிறது. அதேபோல, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் ஜாகிர் நாயக் தங்களது நாட்டுக்குள் வரக்கூடாது என்றே தடை விதித்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் ஜாகிர் நாயக்குக்கு தடை விதிக்கப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு தப்பிச் சென்று விட்டார். இஸ்லாமிய நாடானா மலேசியா, ஜாகிர் நாயக்குக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. அவரை நாடு கடத்தும்படி இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும், அந்நாடு மறுத்துவிட்டது. அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி பாதுகாத்து வருகிறது. எனினும், அந்நாட்டிலேயே 7 மாநிலங்களில் பிரசங்கம் செய்வதற்கு ஜாகிர் நாயக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல நாடுகளும் ஜாகிர் நாயக் பிரசங்கங்களுக்கு தடை விதித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக் ஒரு ஞானி என்றும், அவரை வேண்டாம் என்று சொன்ன இந்த அரசு வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ.யின் கிளை அமைப்பாக கருதப்படும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கூட்டம் நெல்லையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயதரணி, “ஜாகிர் நாயக் பற்றி எனக்கு ஓரளவுக்குத் தெரியும். எனினும், மேலதிக தகவல்களை நிஜாமுதீனிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். ஜாகிர் நாயக் பற்றி கேட்கும்போது நான் என்னையே பார்ப்பது போல இருக்கிறது.

ஏனெனில், அவர் ஹிந்து மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவற்றுடன் இஸ்லாம் மதத்தை ஒப்பிட்டு, அவற்றிலுள்ள நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி வரும் ஒரு ஞானி. அப்படிப்பட்ட ஒரு ஞானியை, இந்த நாட்டுக்கு வேண்டாம் என்று சொல்லக் கூடிய ஒரு அரசாங்கம் இருக்குமேயானால், அப்படிப்பட்ட அரசாங்கமே நமக்கு வேண்டாம்” என்று பேசிவருகிறார். இந்நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்லாமியர்களே வெறுக்கும் வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கை ஞானி என்று கூறியிருக்கும், விஜயதரணியின் இப்பேச்சு நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it