போலி போராளிக்கு பொங்கிய ப.சி – 8 ஆண்டு வரலாறை தோண்டி எடுத்த நெட்டிசன்கள்

போலி போராளிக்கு பொங்கிய ப.சி – 8 ஆண்டு வரலாறை தோண்டி எடுத்த நெட்டிசன்கள்

Share it if you like it

டெல்லியில் நடைபெற்றுவரும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை உலகளவில் இந்திய வெறுப்பு பிரச்சாரமாக மாற்ற சுற்றுசூழலியல் செயல்பாட்டாளர் என சொல்லப்படும் கிரேட்டா தென்பர் உட்பட பலரும் திட்டமிட்டிருந்தது அம்பலமாகி இருக்கிறது. இந்நிலையில் நம்நாட்டை சேர்ந்த திஷா ரவி என்ற செயல்பாட்டாளரும் இச்சதிச்செயலுக்கு உதவியது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

உடனே பொங்கிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், இந்த கைதை எதிர்த்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் கடந்த 2012 ம் ஆண்டு இவரது மகனான கார்த்திக் சிதம்பரம் குறித்து ரவி என்ற தொழில் முனைவோர் ஒருவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்ததற்கே கைது செய்து சிறையில் அடைத்ததை நினைவுபடுத்தி கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it