காவிரி விவகாரம் தொடர்பாக இன்றே புதிய அமர்வு – உச்ச நீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக இன்றே புதிய அமர்வு – உச்ச நீதிமன்றம்

Share it if you like it

காவிரியில் கர்நாடகா அரசு உரிய தண்ணீர் திறக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த புதிய அமர்வு இன்றே அமைக்கப்படும் என உத்தரவிட்டது. மேலும் கர்நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன்வைக்க முயன்ற போது புதிய அமர்வில் வாதிடமும் அறிவுறுத்தியது


Share it if you like it