நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

Share it if you like it

பாரத அரசால் அறிவிக்கப்பட்ட தீவிவாதியான காலிஸ்தானை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கனடாவின் வின்னிபெக் நகரில் சில நாட்களுக்கு முன், 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த நிலையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பஞ்சாப்பில் உள்ள இந்து மத தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சூழலில், நாடு முழுவதும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. காலிஸ்தானை சேர்ந்த அர்ஷ்தீப் தல்லா கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் 51 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.


Share it if you like it