ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு- இளங்கோவனுக்கு நோட்டீஸ்.

ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு- இளங்கோவனுக்கு நோட்டீஸ்.

Share it if you like it

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இ. வி. கே. எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி எடுத்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயகுமாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலின் போது காங்கிரஸ், அதிமுக மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது விதிமுறை மீறல் நடைபெற்றதாகவும் 10,000 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நாள்தோறும் ரூ.550 வீதம் வழங்கப்பட்டதாகவும் விஜயகுமாரி தனது மனதில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தேர்தலில் வெற்றி பெற்ற இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் தேர்தல் ஆணையம், நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.


Share it if you like it