தமிழகத்தில் ஓணம் உற்சாக கொண்டாட்டம்

தமிழகத்தில் ஓணம் உற்சாக கொண்டாட்டம்

Share it if you like it

கேரள மக்களின் ஓணம் பண்டிகை. தமிழகத்திலும் வழக்கமான உற்ச்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட எல்லை மாவட்டங்களிலும் மலையாள மக்கள் அதிக அளவு வசிக்கும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மலையாள மக்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு, அவியல், பாயாசத்துடன் சமையல் படைத்து ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் காஞ்சி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு விடுமுறை அளிக்கப்படவில்லை.


Share it if you like it