உயர்நீதிமன்றங்களில் 70 நீதிபதிகள் நியமிக்ப்படாமல் இருப்பது தொடர்பாக பெங்களூரூ வழக்கறிஞர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகளை நியமனம் செய்யாது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடங்களுக்கும் நீதிபதிகள் நியமிக்கப்படும் வரை 10 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.