பாக். பெண் ஏஜென்டுக்கு ராணுவ ரகசியம்: இந்திய வீரர் கைது!

பாக். பெண் ஏஜென்டுக்கு ராணுவ ரகசியம்: இந்திய வீரர் கைது!

Share it if you like it

இந்திய ராணுவ ரகசியங்களை ஹனி ட்ராப் மூலம் பாகிஸ்தான் பெண் ஏஜென்ட்டுக்கு கசிய விட்ட ராணுவ வீரரை ராஜஸ்தான் மாநில சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம் பகுண்டா மாவட்டம் கஞ்சன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்திமாய் ராணா (24). இவர், கடந்த 2018-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு பாகிஸ்தான் பெண் ஏஜென்ட்டுகளான குர்னூர் கவுர் என்கிற அங்கிதா, நிஷா ஆகியோருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அங்கிதா, தான் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் என்றும், இந்திய ராணுவத்தில் பொறியியல் சேவையில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல, நிஷாவும் ராணுவத்தில் செவிலியராக பணிபுரிவதாகக் கூறியிருக்கிறார்.

ஆனால், உண்மையில் அப்பெண்கள் இருவரும் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் ஏஜென்ட்டுகளாவர். அதாவது, பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவும், இந்திய ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்வதற்காகவும், ஹனி ட்ராப் என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த அழகான பெண்களை தேர்வு செய்து, பயிற்சி கொடுக்கிறது. பின்னர், அப்பெண்களிடம் தலா 50 பேர் வீதம் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது. இந்த ராணுவ வீரர்களை காதல் வலையில் வீழ்த்தி, இந்தியாவின் ராணுவ ரகசியங்களை கறப்பதுதான் இந்த ஹனி ட்ராப் திட்டம்.

இந்த பெண்கள் இருவரும் ராணாவுடன் சமூக வலைத்தளங்களில் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்கள். பிறகு, தங்களது திட்டப்படி இந்தியாவின் ராணுவ ரகசியங்களை ராணாவிடமிருந்து கறந்திருக்கிறார்கள். இதற்கு பதிலாக ராணாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கிறார்கள். ஆகவே, இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை, மேற்கண்ட பாகிஸ்தான் ஏஜென்ட்டுகளான அங்கிதா மற்றும் நிஷாவுக்கு அனுப்பி இருக்கிறார். இந்த விஷயத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் புலனாய்வு உளவுப் பிரிவான சி.ஐ.டி. போலீஸார், மோப்பம் பிடித்து விட்டனர். இதையடுத்து, ராணாவை கைது செய்திருக்கிறார்கள். ராணுவ ரகசியங்களை ராணுவ வீரரே கசிய விட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it