பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் Work From Home திட்டம் டமார்..!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் Work From Home திட்டம் டமார்..!

Share it if you like it

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதலுக்கு, மூளையாக செயல்பட்ட கொடூரன் ஹாஃபீஸ் சையத். உலகின் 90% இஸ்லாமிய பயங்கரவாதிகள் வசிக்கும், பாகிஸ்தான் தான் இவரின் தாயகம். 166 இந்தியர்களின் உயிரை பறித்த 2008 மும்பை தாக்குதல் முதல் புல்வாமாவில் இந்திய ராணவ வீரர்களுக்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் வரை தனது மதத்தின் பெயரால் ஈவு இரக்கமின்றி  பல அப்பாவி மக்களின் உயிரை பறித்த இந்த அயோக்கியனை, அமெரிக்கா, இந்தியா, போன்ற வல்லரசு நாடுகளின் பார்வையில் இருந்து பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் மறைத்து வருகின்றது.

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ் மூலம், உலகமே இன்று வரை  ஸ்தம்பித்து போன நிலையிலேயே உள்ளது. இந்த வைரஸின் பரவலை தடுக்க, மக்கள் பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பாகமாக வீட்டில் இருந்த படி தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இம்முறையை பல்வேறு நிறுவனங்கள் இன்று வரை செயல்படுத்தி வருகிறது.

தீவிரமாக செயல்பட கூடிய  ஹாஃபீஸ் சையத்தின் இந்த பயங்கரவாத அமைப்பும், வீட்டில் இருந்த படி தங்கள் பணி செய்யும் முறையை சமீபத்தில் பரிசோதனை செய்து பார்த்து உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த முயற்சி அவர்களுக்கு எதிராக அமைந்து விட்டது.

பாகிஸ்தானின் பிரதான நகரமான லாகூரில் வசித்து வரும் ஹாஃபீஸ் சையத், வீட்டின் முன்னாள் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டில் தயாரித்த வெடி குண்டை வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 


Share it if you like it