சிசுவின் தலையை வெட்டி… பாகிஸ்தானில் பயங்கரம்!

சிசுவின் தலையை வெட்டி… பாகிஸ்தானில் பயங்கரம்!

Share it if you like it

பாகிஸ்தானில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர், சிசுவின் தலையை வெட்டி கருப்பையிலேயே வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தர்பார்க்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனா குமாரி. ஹிந்து மதத்தைச் சேர்ந்த இவர், நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு பிரசவம் பார்க்க டாக்டர் இல்லாததால், அங்கிருந்த மருத்துவ ஊழியர் ஒருவர் சனா குமாரிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். கருப்பையில் இருந்த பச்சிளம் குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது, தலை சிக்கிக் கொள்ளவே, அதை வெட்டி கருப்பையிலேயே வைத்து தைத்து விட்டார்.

இதனால் சனா குமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால், நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் பிரச்னையாகி விடும் என்று கருதிய அந்த மருத்துவ ஊழியர், வேறு ஏதேதோ காரணத்தைக் கூறி, அப்பெண்ணை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியிருக்கிறார். உடனே, அவரது உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு, மிதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோதுதான், கருப்பையில் குழந்தையின் தலை மட்டும் இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சனா குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலையை வெளியே எடுத்தனர். இதன் பிறகே, சனா குமாரி சகஜ நிலைக்கு திரும்பினார். இதனிடையே, மேற்படி விவகாரம் குறித்து அங்கிருந்த டாக்டர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போலீஸார் சென்றபோது, அந்த மருத்துவ ஊழியர் தலைமறைவாகி விட்டார். இக்கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவ ஊழியரை தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அலட்சியத்தால் நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.


Share it if you like it