பாளையில்., நக்ஸலைட்டுகள் மாநாடு களத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்..!

பாளையில்., நக்ஸலைட்டுகள் மாநாடு களத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்..!

Share it if you like it

பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு என்ற பெயரில் பாளையங்கோட்டையில் டிசம்பர் 27-ம் தேதி நக்ஸலைட்டுகள், தேச விரோதிகள், கூட்டம் நடைபெற உள்ளது… அதனை ஒருங்கிணைப்பவர் தே. ஜோதி..

தமிழகத்தை சேர்ந்த நக்சலைட் வேல் முருகனை அண்மையில் கேரள பகுதியில் அம்மாநில காவல்துறை சுட்டு கொன்றது.. பயங்கரவாதியின் இறுதி சடங்கில் பங்கேற்று அவரது குடும்பத்தினருக்கு போதிய உதவிகளை செய்தவர் ஜோதி..

இவரது முகநூல் பக்கத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக பல கருத்துக்கள் உள்ளதை காண முடியும்.. காணொளி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்..

மாநாடு நிறைவுரையில் மு.க. ஸ்டாலின், SDPI முபாரக், ஆளூர் ஷாநவாஸ்,  நவாஸ்கனி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன் பங்கேற்க உள்ளனர்.. சி.எஸ்.ஐ டயோசிசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது..

இக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம், விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://epaper.dinakaran.com/c/56977884

 


Share it if you like it

One thought on “பாளையில்., நக்ஸலைட்டுகள் மாநாடு களத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்..!

  1. பாளையங்கோட்டையில் நடத்தத் திட்டமிட்டுள்ள பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாட்டை அரசு கண்டிப்பாகத் தடை செய்ய வேண்டும்.

Comments are closed.