நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: 8 பணியாளர்கள் சஸ்பெண்ட் !

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: 8 பணியாளர்கள் சஸ்பெண்ட் !

Share it if you like it

தலைநகர் டெல்லியில் நேற்று (டிச.13) மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக இன்று (டிச.14) மக்களவைப் பணியாளர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை ஒத்திவைப்பு: இதற்கிடையில் மக்களவை இன்று காலை கூடியதிலிருந்து எதிர்க்கட்சியினர் நேற்றைய சம்பவத்தை சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் சமாதானத்தை உறுப்பினர்கள் ஏற்காததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Share it if you like it