பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது-பாயுமா குண்டாஸ்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது-பாயுமா குண்டாஸ்

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில், கிறிஸ்தவ பாதிரியான ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள்,பாரத மாதா,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நகர் கோவில் சட்ட மன்ற உறுப்பினர் காந்தி ஆகியோரை இழிவாக பேசியிருந்தார் இதனால் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து அவர்மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் பாதிரி ஜார்ஜ் பொன்னையா கைதுநடவடிக்கையில் இருந்து தப்பிக்க சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுரை கருப்பாயூரணி அருகே போலீசார் நடத்திய சோதனையின் போது ஒரு காரில் பாதிரி ஜார்ஜ் பொன்னையா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினால் அவரை கைது செய்தனர்.

ஹிந்து மதத்தையும் ,ஹிந்து தெய்வங்களையும் இழிவாக பேசி வரும் இவரை போன்றவர்கள் மீது அரசு தக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும், ஜார்ஜ் பொன்னையாவை குண்டாஸில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it