இந்தியாவுக்கு முதல் பதக்கம்- பிரதமர் பாராட்டு

இந்தியாவுக்கு முதல் பதக்கம்- பிரதமர் பாராட்டு

Share it if you like it

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார்.இந்த வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஒலிம்பிக் போட்டிகளுக்கு இதுபோல ஒரு நல்ல ஆரம்பம் அமையுமா? என்று தெரியவில்லை. வெள்ளிப்பதக்கத்தை வென்ற அவருக்கு எனது பாராட்டுகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியனை உத்வேகப்படுத்துகிறது.’ என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it