ஈ.வெ.ரா.வை தலையணை வைத்து கொல்ல முயன்றனர்: மூத்த பத்திரிகையாளர் பகீர் தகவல்!

ஈ.வெ.ரா.வை தலையணை வைத்து கொல்ல முயன்றனர்: மூத்த பத்திரிகையாளர் பகீர் தகவல்!

Share it if you like it

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஈ.வெ.ரா.வை கொல்ல முயன்றனர் என மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இணையதள ஊடகமாக இருப்பது வியன் தமிழ். இந்த, ஊடகத்தின் நெறியாளர் கார்த்தி சங்கர் மூத்த பத்திரிகையாளர் பாண்டியனிடம் அண்மையில் நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது, நெறியாளர் இவ்வாறு கேள்வி எழுப்பினார் ;

ஆரிய திராவிட எதிர்ப்பில் பெரியார் மிக தீவிரமாக இருக்கிறார். அப்போது, ஏன்? ராஜாஜி அவருக்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்?.

இதற்கு, மூத்த பத்தரிகையாளர் பாண்டியன் கூறியதாவது ; அண்ணாதுரையை விட பெரியார் ராஜாஜியை நம்பினார். பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொள்ள செய்து விட்டார். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊருக்கு ராஜாஜி சென்று இருக்கிறார். இதனை, அறிந்து கொண்ட பெரியார் அதே ஊருக்கு சென்று உள்ளார். அப்போது, உங்களை தேடிதான் நான் இவ்வளவு தூரம் வந்தேன். உங்களிடம் நிறைய பேச வேண்டி இருக்கு கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இருவரும் ரயிலில் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது, மணியம்மையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்னை கொன்று விடுவார்கள் போல் உள்ளது. என்னை தலையணை வைத்து அமுக்கி கொல்ல முயற்சி செய்தார்கள்.

என்னை கொன்று விட்டு எனது இயக்கத்தையும், எனது சொத்தையும் அபகரித்து கொள்வார்களோ? என்று பயமாக இருக்கிறது என்று ராஜாஜியிடம் ஈ.வெ.ரா. கூறியிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

ஈ.வெ.ரா. குறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் கூறிய பகீர் தகவலுக்கு திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி பதில் அளிப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it